வெள்ளி, 19 ஏப்ரல், 2024

‘ராம நவமி’யில் மோடி செய்த மிக மிக மிக நல்ல காரியம்!!!

மிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தச் சிறப்பாகப் பங்காற்றியதற்காக அண்ணாமலைக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணாமலையை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்[dailythanthi.com/].

அதன் தொடக்கம் நம்மைப் பெரிதும் கவர்வதாக அமைந்துள்ளது.

தொடக்க வரி,

"எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி[ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடுதல்] திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்பதாகும்.


ராம நவமியில் எதைச் செய்யத் தொடங்கினாலும் அது காலமெல்லாம் நல்ல பயனைத் தரும் என்பது இந்த வரியின் உள்ளர்த்தம் ஆகும். அதாவது, மோடி எழுதிய இந்தக் கடிதத்திற்கு நல்ல பலன் விளையும் என்று நம்புகிறார் அவர்.


கடிதம் எழுதுவதற்குக்கூட நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்று எவரும் மோடியை எள்ளி நகையாடாதீர்


அது அவர் சுய அனுபவங்களின் மூலம் பெற்ற நம்பிக்கையாகும்.


*கடிதம் வரைவது என்றில்லை, ராம நவமியில், நல்ல நேரம் பார்த்துக்[காலையில்] கழிவறை சென்று காலைக்கடனை நிறைவேற்றினால், நீண்ட காலமாகத் தொல்லை கொடுத்த தீராத ‘கழிவேற்றல் பிரச்சினை’ தீரும். அப்புறம் நம் ஆயுள் உள்ளவரை மலக் கழிவை வெளியேற்றுவதில் கிஞ்சித்தும் சிரமமே இராது[ஒன்னுக்குப் போவதில் உள்ள தொந்தரவுகளும் அடங்கும்].


*நம் பகையாளியான பக்கத்து வீட்டுக்காரனை, ராம நவமியில், “நீ நாசமாப் போவே” என்று சாபம் கொடுத்தால் அது பலிக்கும்.


*குழந்தைப் பாக்கியம் இல்லாத கணவனும் மனைவியும் அந்த நாளில் உடலுறவு கொண்டால்[பகலோ இரவோ] ஆணோ பெண்ணோ விரும்பிய மகவைப் பெறலாம்.


*ராமநவமி நாளில் திருடப்போகிறவன் திருடு கொடுப்பவர்களிடம் பிடிபடவே மாட்டான்.


*ஆசைக்கு இணங்க மறுத்துப் பல நாட்களாகப் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருக்கும் குமரிப் பெண், ராமநவமியில் அழைத்தால் ஓடோடிவந்து படுத்துவிடுவாள்.


ஆக,


ராம நவமியில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்துமே நாம் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.


வெல்க மோடி! அண்ணாமலையும் வெல்க!!



வியாழன், 18 ஏப்ரல், 2024

“உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது”... நாறவாயன் அண்ணாமலை!!!

சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டுச் சேகரித்த அண்ணாமலையிடம் பெண் ஒருவர், “நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு இந்தக் காட்டான் அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்” என்று அடாவடித்தனமாய்ப் பதில் சொல்லியிருக்கிறான்[மாலைமலர்&பிற ஊடகங்கள்].

நீட் தேர்வால் எந்த வகையிலெல்லாம் தமிழ் மாணவர்களுக்குப் பயன் விளைகிறது என்பதற்கு ஆதாரம் காட்டலாம்; குழந்தைகள் உயிரைப் போக்கிக்கொள்வது தவறு என்று அறிவுரை சொல்லலாம். இதற்கு மாறாக, “உயிரே போனாலும் நீட் ரத்து செய்யப்படாது” என்று பொத்தாம் பொதுவாக அடித்துவிடுகிறானே இந்தத் தற்குறி, இவன் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது யாருடைய உயிரை?

தமிழ்ப் பிள்ளைகளின் உயிர் என்றால், இந்தத் தமிழ் மண்ணின் மக்கள் இவனை இங்கு நடமாடவிடுவதே தவறு. “தொலைதூர, மனித நடமாட்டம் இல்லாத தீவுக்கு ஓடிப்போய்ப் பிழைத்துக்கொள்” என்று விடட்டியடிக்க வேண்டும்.

பிள்ளைகளைக் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றால், வேறு யாருடைய உயிரைக் குறிப்பிடுகிறான்?

மண்ணுக்குப் பாரமாகச் சுற்றித் திரியும் இவனுடைய உயிரையா, பச்சைப் பொய்களின் உறைவிடமான இவனுடைய தலைவன் மோடியின் உயிரையா?

இரண்டில் எதுவாயினும் இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. “பீடை[கள்] ஒழிந்தது[ன]” என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் மக்கள்.

பொது மக்கள் முன்னிலையில் எதைப் பேச வேண்டும், எதையெல்லாம் பேசக்கூடாது என்பதுகூடத் தெரியாத இந்த ஆறறிவுச் சூன்யனை இவனின் தலைவன் மோடி தமிழ்நாடு ‘பாஜக’ தலைவனாக நியமித்தது அந்த மனிதனின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறதா, அது இன்மையை வெளிப்படுத்துகிறதா?!

https://www.maalaimalar.com/news/state/we-will-not-cancel-neet-even-if-we-die-annamalai-speech-during-the-election-campaign-713786